திவாகரன், ஜெயானந்த் மீது ஃபேஸ்புக்கில் சாடிய வெற்றிவேல்

திவாகரன், ஜெயானந்த் மீது ஃபேஸ்புக்கில் சாடிய வெற்றிவேல்
திவாகரன், ஜெயானந்த் மீது ஃபேஸ்புக்கில் சாடிய வெற்றிவேல்

தியாகங்களை கொச்சைப்படுத்தும் நோக்கிலும், உணர்வுகளை காயப்படுத்தும் எண்ணத்திலும் சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரனும், ஜெயானந்தும் செயல்படுவது வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முகநூலில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூலில் பதிவிட்டுள்ள வெற்றிவேல், தினகரனையும், அவருக்கு பக்கத்துணையாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், எண்ணிலடங்கா தொண்டர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கிலும், காயப்படுத்தும் எண்ணத்திலும் திவாகரனும், ஜெயானந்தும் செயல்படுவது  வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு அவர்கள் உண்மைக்கு புறம்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகங்களில், கழகத்திற்கு விரோதமாக வெளியிடப்படும் பல சித்தரிக்கப்பட்ட பதிவுகளை பார்த்தவுடனேயே கருத்து தெரிவிப்பதை தவிர்த்து, அச்செய்தியின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதம் செய்ய தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பிரிவினையை, உண்மைக்கு மாறான செய்திகளை ஒருபோதும் நாம் நம் மத்தியில் அனுமதித்திடக்கூடாது என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் கட்சி விரோத போக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com