வேலூர்: அதிமுகவை விமர்சித்ததாக கூறி எல்.கே.சுதீஷின் உருவபொம்மை எரிப்பு

வேலூர்: அதிமுகவை விமர்சித்ததாக கூறி எல்.கே.சுதீஷின் உருவபொம்மை எரிப்பு

வேலூர்: அதிமுகவை விமர்சித்ததாக கூறி எல்.கே.சுதீஷின் உருவபொம்மை எரிப்பு
Published on

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பின்னர் அதிமுகவை தரக்குறைவாக விமர்சித்தாக கூறி தேமுதிகவின் துணைச் செயலாளர் சுதீஷ் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக தொகுதி உடன்பாடு ஏற்படாததை அடுத்து இன்று அக்கூட்டணியில் இருந்து விலகியது. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அ.தி.மு.க குறித்தும் கட்சியின் மூத்த தலைவர்கள் குறித்தும் தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் அவதூறாக பேசியதாக, காட்பாடியைச் சேர்ந்த அதிமுகவினர் காங்கேயநல்லூர் பெரியார் சிலை அருகே தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருதம்பட்டு காவல் துறையினர் தண்ணீர் ஊற்றி அனைத்து உருவ பொம்மையை அப்புறப்படுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com