போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்த முதலமைச்சர்

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்த முதலமைச்சர்

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியடைந்த முதலமைச்சர்
Published on

உத்தராகண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத் அவர் போட்டியிட்ட ஹரித்வார், கிச்சா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார்.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இன்று வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக 55 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. இதன் மூலம், பெரும்பான்மை பெற்று பாஜக உத்தரகாண்டில் ஆட்சி அமைக்க உள்ளது.

காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் ஹரீஷ் ராவத் போட்டியிட்ட ஹரித்வார் மற்றும் கிச்சா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

ஹரித்வார் தொகுதியில் ஹரீஷ் ராவத் பாஜக வேட்பாளர் யதீஸ்வரனாந்திடம் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மற்றொரு தொகுதியான கிச்சாவில் 92 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ராஜேஷ் சுக்லாவிடம் தோவியடைந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com