உத்திரமேரூர்: திமுக வேட்பாளருக்கு சால்வை அணிவித்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

உத்திரமேரூர்: திமுக வேட்பாளருக்கு சால்வை அணிவித்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

உத்திரமேரூர்: திமுக வேட்பாளருக்கு சால்வை அணிவித்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
Published on

திமுக வேட்பாளருக்கு சால்வை அணிவித்ததால் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

உத்திரமேரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பாக சுந்தர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் உத்திரமேரூரை அடுத்துள்ள சாலவாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிக்கும் போது, அந்த கிராமத்தின் ஊராட்சி செயலாளர் சதீஷ் திமுக வேட்பாளரை வரவேற்று பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு சால்வை அணிவித்தார்.

அதேபோல 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிந்த பெண்களை, அதிகாரிகளின் அனுமதியின்றி; ஒன்றுகூட்டி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதன் காரணமாக வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com