இறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு

இறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு

இறுதிக்கட்ட தேர்தல்: யோகி ஆதித்யநாத், நிதிஷ் குமார் வாக்களிப்பு
Published on

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோர் இன்று வாக்களித்தனர்.

17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது.இன்றைய தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், சத்ருஹன் சின்ஹா, மனோஜ் சின்ஹா, ஆர். பி சிங் உள்ளிட்டோர் போட்டி யிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வந்து வாக்களித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் இன்று வாக்களித்தார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com