வேலூர் கோட்டை அகழியில் மிதந்த ஆண் சடலம்...கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

வேலூர் கோட்டை அகழியில் மிதந்த ஆண் சடலம்...கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
வேலூர் கோட்டை அகழியில் மிதந்த ஆண் சடலம்...கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை

வேலூர் கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு. வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வேலூரில் உள்ள கோட்டை அகழியில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண் முதல்கட்ட விசாரணையில் கடந்த சனிக்கிழமை சுமார் 7 பேர் கொண்ட குழுவினர் கோட்டை அகழி மீது அமர்ந்து மதுஅருந்திக் கொண்டிருந்ததாகவும், அப்போது ஒருநபர் அகழியில் குதித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் வேலூர் வடக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com