வறுமையால் படிக்க முடியவில்லை... விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!

வறுமையால் படிக்க முடியவில்லை... விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!
வறுமையால் படிக்க முடியவில்லை... விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!

பொன்னமராவதியில் கொரோனா காலத்தில் குடும்ப வறுமையின் காரணமாக கல்லூரியில் சேர முடியாத காரணத்தால் மனமுடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மதியணி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் என்பவரின் மனைவி கலையரசி (39). இவரது கணவர் குமரேசன் இறந்து விட்ட நிலையில் கலையரசி பொன்னமராவதி புதுப்பட்டி பிடாரி கோவில் தெருவில் தனது மகள் ரோகிணி உடன் வசித்து வருகிறார். 12ஆம் வகுப்பு முடித்த ரோகிணி கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என தனது தாய் கலையரசியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாய் கலையரசி தனது மகளிடம் தற்போது கொரோனா பொது முடக்கத்தால் வேலை இல்லை. மேலும் குடும்ப வறுமையின் காரணமாக இப்போது கல்லூரியில் சேர்க்க முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் கல்லூரிக்கு சென்று படிக்க முடியாது என்று நினைத்து மனமுடைந்த ரோகிணி விஷம் அருந்தி வீட்டில் மயங்கி கிடந்துள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த கலையரசி மயங்கி கிடந்த தனது மகளை மீட்டு பொன்னமராவதி வளையப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில், ரோகிணியின் உடல்நிலை மோசமானதால் அவரை மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரோகிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com