நெல்லை: 2 பெண்கள் மீது வெடிகுண்டுகள் வீசி, அரிவாளால் வெட்டிக்கொலை

நெல்லை: 2 பெண்கள் மீது வெடிகுண்டுகள் வீசி, அரிவாளால் வெட்டிக்கொலை
நெல்லை: 2 பெண்கள் மீது வெடிகுண்டுகள் வீசி, அரிவாளால் வெட்டிக்கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் பெண்கள் மீது, வெடிகுண்டுகள் வீசியும், தலையை அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 12பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் மீது, வெடிகுண்டுகள் வீசியும், தலையை அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாங்குநேரியில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் IPC 147, 148, 294B, 302, 307, 324, 450, 506 (2) என்ற 8 பிரிவுகளிலும், சிறப்புப் பிரிவு 3 & 4 ( வெடிகுண்டு வீசியதற்காக ஒரு வழக்கும்), (வீட்டை சேதப்படுத்தியதற்கு ஒரு வழக்கும்) சிறப்பு பிரிவு sec - 4 ல் பெண் வன்கொடுமைக்கான வழக்கும்) என 11 பிரிவுகளில் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடந்த தாக்குதலில் தப்பித்தவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் எதிரிகள் 12 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் கூலிப்படையினர் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணைக்கு பிறகே தெரியவரும் என்று நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com