கொரோனா எதிரொலி? : ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இரண்டு அம்பயர்கள்!

கொரோனா எதிரொலி? : ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இரண்டு அம்பயர்கள்!
கொரோனா எதிரொலி? : ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இரண்டு அம்பயர்கள்!

ஐபிஎல் தொடரிலிருந்து கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து தற்போது அம்பயர்கள் இருவரும் விலகியுள்ளனர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகுவதாக நிதின் மேனன் மற்றும் பால் ரீஃபில் ஆகிய அம்பயர்கள் தெரிவித்துள்ளனர். நிதின் மேனனின் தாய் மற்றும் மனைவிக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதின் மேனன் கிரிக்கெட் களத்தில் பணியாற்றும் மன நிலையில் இல்லை என்றும் அவர் உடனடியாக குடும்ப உறுப்பினர்களை பார்க்க சென்று விட்டார் என்றும் BCCI அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு பயணிகள் வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியரான பால் ரீஃபில் உடனடியாக புறப்பட்டுவிட்டார் எனத் தெரிகிறது. இவர்கள் இருவருக்கு பதில் மாற்று அம்பயர்களை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் விலகியுள்ளார்.

அவரது குடும்பத்தினருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் தற்காலிகமாக விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா ஆகிய ஆஸ்திரேலிய வீரர்களும் தொடரில் இருந்து பாதியில் விலகி தாயகத்திற்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் உரிய பாதுகாப்புகளுடன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com