இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் கோரி தினகரன் நீதிமன்றத்தில் மனு

இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் கோரி தினகரன் நீதிமன்றத்தில் மனு

இரட்டை இலை விவகாரம்: கூடுதல் அவகாசம் கோரி தினகரன் நீதிமன்றத்தில் மனு
Published on

இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை யாருக்கு என்பது குறித்து விரைந்து முடிவு காண வேண்டும் எனக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனிடையே கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் 3 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, செப்டம்பர் 28-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டு விட்டது. அத்துடன், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை திட்டமிட்டபடி அக்டோபா 6-ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் 3 வார கால அவகாசம் வழங்கவும், அதன்பின்னரே இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் முடிவெடுக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தினகரன் சார்பில் 7 லட்சம் பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com