கர்நாடகாவில் 2 காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி?

கர்நாடகாவில் 2 காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி?

கர்நாடகாவில் 2 காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி?
Published on

கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சியைச்‌ சேர்ந்த எம்எல்ஏக்கள் இருவர் ‌பதவி விலகியுள்ளனர்.‌ இத‌னால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு மீண்டு‌‌ம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தங்கள் ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களை பாஜக மிரட்டி வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்களான ஆனந்த் சிங் மற்றும் ரமேஷ் ஜர்க்கிஹோலி ஆகியோர் தங்கள் ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவி விலகுவார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கர்நாடகாவில் ஆளும் மஜத - காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

கடந்த 14ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப்பட்ட நிலையில் அதில் 2 சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு முதல்வர் குமாரசாமி வாய்ப்பளித்தார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இதற்கிடையில் மஜத - காங்கிரஸ் எம்எல்ஏக்களை அச்சுறுத்தியும் பிளாக்மெயில் செய்தும் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் குமாரசாமியும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதற்கிடையில் ஆட்சி கவிழ்ந்தால் தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்றும் இதற்கு காங்கிரஸ் - மஜத தலைவர்கள்தான் காரணம் என்றும் மாநில பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com