வேளச்சேரியில் பணப்பட்டுவாடா - அதிமுகவினர் இருவர் கைது

வேளச்சேரியில் பணப்பட்டுவாடா - அதிமுகவினர் இருவர் கைது
வேளச்சேரியில் பணப்பட்டுவாடா - அதிமுகவினர் இருவர் கைது

சென்னை வேளச்சேரியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக அதிகவினர் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்றையதினம் சென்னை வேளச்சேரி 176வது வார்டில் போட்டியிடும் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக அத்தொகுதி திமுகவினருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அங்கு சென்ற அவர்கள், அதிமுக சின்னம் அச்சடிப்பட்ட கவரில் பணம் விநியோகித்துக்கொண்டிருந்த இருவரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்களிடம் பூத் ஸ்லிப்பும் இருந்தது. உடனே வேளச்சேரி போலீசாரை வரவழைத்து இருவரையும் ஒப்படைத்தனர். தகவலறிந்து அந்த இடத்திற்குச் சென்ற தேர்தல் பறக்கும்படையினர் போலீசாரிடமிருந்து புகாரைப் பெற்று இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

அதிமுக வேட்பாளர் மூர்த்தியின் ஆதரவாளர்கள் எனக் கூறப்படுகிற சுகுமார் மற்றும் வெங்கடேஷ் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூ.23,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். தற்போது அவர்களிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com