திடீர் ட்விட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான் வேண்டும்: தமிழிசை

திடீர் ட்விட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான் வேண்டும்: தமிழிசை
திடீர் ட்விட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான் வேண்டும்: தமிழிசை

கந்து வட்டிக் கொடுமைக்கு தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் துறை சார்ந்த ட்விட்டர் அரசியல்வாதிகள் எங்கே என தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‌கேள்வி எழுப்பியுள்ளார்.

திரைப்பட இணைத்தயாரிப்பாளர் அசோக் குமார் மரணத்தை அடுத்து, கந்துவட்டிக்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன. அசோக்குமார் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் துறை சார்ந்த ட்விட்டர் அரசியல் எங்கே என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ‌கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழிசை, தனது துறை சார்ந்த துக்கம், தன்னை ஏற்றி விட்ட துறையில் பெரும் துயரம், பகிர்ந்து கொள்ளா கொடூர அமைதி, திடீர் ட்விட்டர் அரசியல்வாதிகள் எங்கே என்று கேள்விக‌ள் எழுப்பி, தேடத்தான் வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம் நடிகர் கமல்ஹாசனை தமிழிசை மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com