அரசு உரிய நடவடிக்கை எடுக்காததே டெங்கு பரவுவதற்கும், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் காரணம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டெங்கு பாதிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் எத்தனை என்பது மக்களுக்கு தெரியும். டெங்குவால் இறந்தவர்கள் வேறு காரணத்தால் இறந்தார்கள் என ஆவணங்கள் தயார் செய்து எதிர்க்கட்சியையும், நீதிமன்றத்தையும் அரசு ஏமாற்றலாம். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். கடந்த 10 வருடங்களாக மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் இந்த வருடத்தில் ஆயிரக்கணக்கனோர் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். இவற்றிற்கு காரணம் அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான்.” என்று கூறினார்.