சிறையிலிருந்து டிடிவி தினகரன் விடுவிப்பு

சிறையிலிருந்து டிடிவி தினகரன் விடுவிப்பு
சிறையிலிருந்து டிடிவி தினகரன் விடுவிப்பு

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து, திகார் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை விடுவித்தது. சிறையிலிருந்து வெளிவந்த தினகரன் நாளை சென்னை வருகிறார். சிறையிலிருந்து வெளிவந்த தினகரனை வரவேற்க தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட அதிமுக அம்மா அணியின் 15 எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களுடன் வேணுகோபால்,ஏழுமலை, நாகராஜ் உள்ளிட்ட எம்பிக்களும் உள்ளனர். இரட்டை இலைச்சின்னம் பெற்றுத்தர தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற புகாரில், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது ஜாமீன் மனு மீது நேற்று தீர்ப்பு வழங்கிய டெல்லி நீதிமன்றம், தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா இருவரும் தலா 5 லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமீன் பெறலாம் என்றும், தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. எந்த அதிகாரிக்கு தினகரன் லஞ்சம் தர முயன்றார் என்ற விவரம் தரப்படவில்லை என்றும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு தெளிவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி பூனம் சவுத்ரி, தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com