திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சி: வெற்றி வாய்ப்பை முடிவு செய்த ஒரு ஓட்டு

திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சி: வெற்றி வாய்ப்பை முடிவு செய்த ஒரு ஓட்டு
திருச்சி கூத்தைப்பார் பேரூராட்சி: வெற்றி வாய்ப்பை முடிவு செய்த ஒரு ஓட்டு

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை புறம்தள்ளி ஒருவாக்கு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றிபெற்றார்.

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட கூத்தைப்பார் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில், அனைத்து வார்டுகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் 7-வது வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நித்யா மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கர்ணன் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 244 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கர்ணன் 243 வாக்குகள் பெற்றார். கடைசி நேரத்தில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதன் மூலம் கூத்தைப்பார் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளையும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com