துவாக்குடி நகராட்சி: திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்ற கல்லூரி மாணவி

துவாக்குடி நகராட்சி: திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்ற கல்லூரி மாணவி
துவாக்குடி நகராட்சி: திமுக, அதிமுக வேட்பாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்ற கல்லூரி மாணவி

துவாக்குடி நகராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்ட 22 வயது கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

திருச்சி துவாக்குடி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளது. இதற்கான முடிவுகள் காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரியில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில், துவாக்குடி நகராட்சிக்குட்பட்ட 5-வது வார்டில் போட்டியிட்ட பிஇ இரண்டாமாண்டு படிக்கும் 22 வயது கல்லூரி மாணவி 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த குறிப்பிட்ட வார்டில் திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மகேஸ்வரி 81 வாக்குகளும், அமமுக அம்மு (எ) சசிகலா 190 வாக்குகளும், அதிமுக புஷ்பவல்லி 61 வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிட்ட கல்லூhரி மாணவி சினேகா 494 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com