தேர்தல் செலவுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் வேட்பாளர்

தேர்தல் செலவுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் வேட்பாளர்
தேர்தல் செலவுக்காக பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் வேட்பாளர்

திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் 38 வயதான நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்த்தி வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் தேர்தல் துண்டு பிரசுரம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்களுக்காக பணம் வசூல் செய்து வருகிறார்.

வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் பிரச்சார களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் வேட்பாளர்களின் பிரச்சாரமும் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மன்னை சாலை, நாகை சாலை, ரயில்வே சாலை, உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி வாகனத்திலும் நடந்து சென்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

தேர்தலில் வாக்களிக்க சில அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகின்றனர். ஆனால் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்த்தி வாக்கு சேகரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் தேர்தல் துண்டு பிரசுரம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்களுக்காக பணம் வசூல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com