கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை?

கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை?
கருணாஸ் உள்பட 4 எம்எல்ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை?

கருணாஸ் எம்.எல்.ஏ மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானவர். ஆனாலும், அவர் அரசுக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதேபோல், அதிமுக எம்.எல்.ஏக்களான அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதில் ரத்தினசபாபதிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளராக கள்ளக்குறிச்சி பிரபு இருந்து வருகிறார். விருத்தாசலம் கலைச்செல்வன் அமமுகவின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் 4 எம்.எல்.ஏக்களுக்கும் சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்ப உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாகத் தெரிகிறது. கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சபாநாயகர் தனபாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிற்பகலில் சந்தித்து பேசினர். அதன் பின்னர் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி வேலுமணி ஆகியோரும் சபாநாயகருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, 4 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பாக பேசப்பட்டதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com