டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி : காரணம் என்ன ?

டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி : காரணம் என்ன ?
டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தற்கொலை முயற்சி : காரணம் என்ன ?

திருப்பூரில் டிக் டாக் பிரபலமான சூர்யா என்ற பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த அய்யம்பாளையம் அருகே உள்ள சபரி நகரைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. இவர் சமூக வலைதளமான டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் மிகவும் பிரபலமானவர். இவரது டிக்டாக் வீடியோக்களால் ‘ரவுடி பேபி’ சூர்யா என அழைக்கப்பட்டார். நாளடைவில் அதனையே தனது பெயராக மாற்றினார் சூர்யா. இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த சூர்யாவுக்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு திருப்பூருக்கு 16ம் தேதி சென்றார்.

சிங்கப்பூரில் இருந்து அவர் வந்ததால் பீதி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து இவரை அதிகாரிகள் அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற நோட்டீஸையும் ஓட்டிச் சென்றனர். 

இதில் சூர்யா மனமுடைந்ததாக கூறப்பட்டுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரை கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தும் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்கொலை செய்து கொள்வது முன்பாகவும் அவர் கண்ணீர் மல்க ஓரு டிக்டாக் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

முன்னதாக, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் குறித்து அவதூறு பரப்பும் விதமாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்ட புகாரில் அவர் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com