துளிர்க்கும் நம்பிக்கை: 25+ ஏழைக் குடும்பங்களுக்கு வீடு தேடிச் சென்று உதவி

துளிர்க்கும் நம்பிக்கை: 25+ ஏழைக் குடும்பங்களுக்கு வீடு தேடிச் சென்று உதவி
துளிர்க்கும் நம்பிக்கை: 25+ ஏழைக் குடும்பங்களுக்கு வீடு தேடிச் சென்று உதவி

'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' குழுவினருக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து உதவி கோரி பெறப்பட்ட 25-க்கும் மேற்பட்ட நலிந்த குடும்பத்தினருக்கு உடனடியாக அத்தியாவசிய உதவிகள் வீடு தேடி சென்றடைந்தது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாட உணவிற்கு கூட வழியில்லாத நிலைக்கு அல்லல்பட்டு வருகின்றனர். இத்தகைய மக்களை காக்கும் வகையில் 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' இயக்கம் செயல்பட்டு வருகிறது. 

அந்த வகையில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்தைச் சார்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்ட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் பெறப்பட்ட அழைப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்ய அவர்களின் வீடு தேடி சென்றது 'துளிர்க்கும் நம்பிக்கை' குழு உதவியது. 

காஞ்சி பட்டினம் முதல் உத்திரமேரூர் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குக்கிராமம் வரை உதவி தேவைப்படுவோர் வீடுகளை தேடித் தேடி சென்று உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த அத்தியாவசியப் பொருள்கள் அனைத்துமே நல்லுள்ளங்கள் அளித்த நன்கொடைகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com