துளிர்க்கும் நம்பிக்கை: வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளி முதியவருக்கு நிவாரணம்

துளிர்க்கும் நம்பிக்கை: வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளி முதியவருக்கு நிவாரணம்

துளிர்க்கும் நம்பிக்கை: வறுமையில் வாடிய மாற்றுத்திறனாளி முதியவருக்கு நிவாரணம்
Published on

அரியலூரில் 3 பேத்திகளுடன் வறுமையில் வாழும் மாற்றுத்திறனாளி முதியவர் குடும்பத்திற்கு, புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டன.

கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் மகனும், மருமகளும் உயிரிழந்த நிலையில் அவர்களது 3 பெண் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். கூலி தொழிலாளியான அவரின் தேவையை அறிந்து ஒருமாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டது. நெறிஞ்சிகோறையைச் சேர்ந்த ஸ்வீட்ஸ் டிரஸ்ட் பாய்ஸ், எண்ணங்களின் சங்கமம் ஆகியோர் இணைந்து இந்த உதவியை வழங்கினர்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த சில கோரிக்கைகளை ஏற்று, செய்யப்பட்ட உதவிகள் இவை.  இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com