துளிர்க்கும் நம்பிக்கை: 15 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள்

துளிர்க்கும் நம்பிக்கை: 15 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள்
துளிர்க்கும் நம்பிக்கை:  15 குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்கள்

புதிய தலைமுறை துளிர்க்கும் நம்பிக்கை வழியாக உதவி கோரிய 15 குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கைக்கு தொடர்புகொண்டவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்க கோரிக்கை வைத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்று வளசரவாக்கம், மூலக்கடை, கிண்டி, கொடுங்கையூர், ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு தலா 20கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான 15 பொருட்கள் கொண்ட மளிகைப்பை இன்று வழங்கப்பட்டுள்ளது.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த சில கோரிக்கைகளை ஏற்று, செய்யப்பட்ட உதவிகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால், 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com