”முழு வாக்கு எண்ணிக்கை முடியும்வரை பொறுப்பாளர்கள் வெளியே வரக்கூடாது” -மு.க.ஸ்டாலின்

”முழு வாக்கு எண்ணிக்கை முடியும்வரை பொறுப்பாளர்கள் வெளியே வரக்கூடாது” -மு.க.ஸ்டாலின்
”முழு வாக்கு எண்ணிக்கை முடியும்வரை பொறுப்பாளர்கள் வெளியே வரக்கூடாது” -மு.க.ஸ்டாலின்

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் என்றும் முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது என ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். #Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சி 115 இடங்களிலும் அதிமுக 73 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கியச் செய்திகள் - லைவ் அப்டேட்ஸ் இங்கே Election Results Breaking

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com