திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது- சத்யபிரதா சாஹூ பேட்டி

திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது- சத்யபிரதா சாஹூ பேட்டி
திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளது- சத்யபிரதா சாஹூ பேட்டி

திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் துணை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் நடைபெற்றது. அதில், அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்ததற்கான ஒப்புதல் சீட்டு இயந்திரங்களை கையாள்வது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்த சொல்லும் பட்சத்தில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com