செல்லூர்ராஜூக்கு எதிராக தெர்மாகோல் போராட்டம்

செல்லூர்ராஜூக்கு எதிராக தெர்மாகோல் போராட்டம்
செல்லூர்ராஜூக்கு எதிராக தெர்மாகோல் போராட்டம்

அமைச்சர் செல்லூர்ராஜூ செட்டியார் இனப் பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி அச்சமூகத்தினர் கண்டனம்
தெரிவித்து தெர்மாகோல் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்ராஜூ, “ரஜினி, தமிழக ஆட்சியைப் பிடிக்க முடியாது; காரைக்குடி
ஆச்சியைப் பிடிக்கலாம்” என்று கூறியிருந்தார். செட்டியார் இனப் பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி
அச்சமூகத்தினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பெண்களை இழிவாகப் பேசிய அமைச்சர் செல்லூர்ராஜூவைக் கண்டித்து தேசிய செட்டியார்கள்
பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்  
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அவர் பதவி விலக வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலங்குடி சந்தைப்பேட்டையில் இருந்து பேரணியாக சென்று வடகாடு முக்கத்திலுள்ள வட்டங்கச்சேரி திடலில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்பதோடு, உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும்
அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். கூடவே செல்லூர் ராஜூவை கண்டிக்கும் விதத்தில்
நூதன முறையில் அங்குள்ள குளத்தில் தெர்மோகோல் அட்டைகளை விட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com