திமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ்

திமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ்
திமுக கூட்டணியில் ஒற்றுமை இல்லை: முரளிதர ராவ்

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மேலிட பார்வையாளர் முரளிதரராவ் குற்றம்சாட்டியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், அதிமுக - பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, பாஜக இந்தியா முழுவதும் வேகமாக பிரச்சாரம் செய்து வருகிறது. கண்டிப்பாக பா.ஜ.க தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது. 300 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெரும். தமிழ்நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோம். 2014 ஆம் ஆண்டில் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம்.

இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக மக்களவை உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அனுப்ப உள்ளோம். அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பாஜகவின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com