மதுபோதையில் கூவத்தில் குதித்து நீச்சல் விளையாட்டு காட்டிய இளைஞர்.. கடுப்பான போலீஸ்!

மதுபோதையில் கூவத்தில் குதித்து நீச்சல் விளையாட்டு காட்டிய இளைஞர்.. கடுப்பான போலீஸ்!
மதுபோதையில் கூவத்தில் குதித்து நீச்சல் விளையாட்டு காட்டிய இளைஞர்.. கடுப்பான போலீஸ்!


சென்னையில் மதுபோதையில் கூவம் ஆற்றில் குதித்த இளைஞரை காவல்துறையினர் ஒரு மணி நேரப் போராட்டத்துக்கு பின் மீட்டனர்.


சென்னை புதுப்பேட்டை பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கூவம் ஆற்றில் குதித்தார். தகவல் கிடைத்ததும் அங்கு காவல்துறையினர் விரைந்தபோது அவர் நீந்தியப்படி தான் இருப்பதாக காட்டிக்கொண்டார். கரைக்கு வரும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டப்போது, "சிறுத்தை சிக்கும் சிறுவண்டு சிக்காது என எண்ணிக்கொண்டு அவர்கள் பிடியில் சிக்காமல் இருக்க நீந்தத் தொடங்கினார். அந்நபரின் உள்நீச்சல் விளையாட்டை வேடிக்கை பார்க்க மக்கள் திரண்டனர்.

வாகன ஓட்டிகளும் வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, காவல்துறையினர் படகில் சென்று அவரை துரத்தினர். ஆனால் அந்த இளைஞரோ சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நீந்தி சிந்தாதிரிப்பேட்டை பாலம் அருகே சென்றுவிட்டார். அங்கு காத்திருந்த காவல்துறையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் அவரை மீட்டனர்.

நீச்சல் அடித்த வேகத்தில் ஆடையை மறைந்த அவர் ஆடையின்றி கரைக்கு வந்ததை அறிந்து உடனே வேறொரு ஆடையை காவல்துறையினர் அணியச்செய்தனர். மேலும் மதுபோதையில் இருந்த அவரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த போதை நபரின் போக்கு கொரோனா பணியிலும், கண்காணிப்பு பணியிலும் இருந்த காவல்துறையினருக்கு தலைவலியை கூட்டியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com