கோபத்தில் தந்தையால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்...!

கோபத்தில் தந்தையால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்...!

கோபத்தில் தந்தையால் மகனுக்கு நேர்ந்த விபரீதம்...!
Published on

சேலம் அருகே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தொல்லை கொடுத்துவந்த மகனை கத்தியால் குத்தி விட்டு நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த மகன் சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 


சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சேகர் என்பவரின் மகன் ஜெகன். இவர் வெள்ளி பட்டறைக்கு வேலைக்குச் சென்று வந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையாகி நாள்தோறும் வீட்டில் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி ரத்தவெள்ளத்தில் ஜெகன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெயிண்ட் அடிக்கும் கூலி வேலைக்கு சென்றபோது தவறி விழுந்து வயிற்றுப்பகுதியில் கம்பி குத்தி விட்டதாக ஜெகனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

இதனிடையே வயிற்றில் கத்தியால் குத்தியதற்கான அடையாளம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் காவல்துறையினரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.

அதில் ஜெகன் மற்றும் அவரது தந்தை சேகர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்தகராறில் சேகர் அருகிலிருந்த கடையில் இருந்த கத்தியை எடுத்து ஜெகனின் வயிற்றுப்பகுதியில் குத்தும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனையடுத்து ஜெகனின் தந்தை சேகரை மல்லூர் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெகன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். வெள்ளி பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்த ஜெகன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி நாள்தோறும் குடித்து விட்டு குடும்பத்தாருக்கு தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனால் மன உளைச்சலில் சேகர் எதிர்பாராதவிதமாக ஆத்திரத்தில் ஜெகனை கத்தியால் குத்தியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com