4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரரின் மகன் கைது !

4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரரின் மகன் கைது !
4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரரின் மகன் கைது !

திருச்சியில் 4 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய போலீஸ்காரரின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் உள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்த ஆயுதப்படை காவலர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்தி (26), தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் சுமதியுடன் (21) செல்போன் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் காதலித்து கடந்தாண்டு சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.


திருமணத்திற்கு பிறகு இருவரும் திருச்சி திருவரம்பூர் பாலாஜி நகரில் வசித்து வந்தனர். கார்த்தி அப்பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார். கணவர் நடத்தையில் சந்தேகமடைந்த சுமதி, அவரது செல்போனை எடுத்து பார்த்த போது கார்த்தி பல பெண்களுடன் இருக்கும் போட்டோ இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் சுமதி. விசாரித்த போது ஏற்கெனவே திருச்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா, சென்னையை சேர்ந்த வாணி, மற்றும் நீலா உள்ளிட்ட 3 பேரை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது.


இதைத் தொடர்ந்து கார்த்திக்கிடம் சுமதி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த லால்குடி மகளிர் போலீசார் கார்த்தியை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com