திருச்சி விமான நிலையம் முற்றுகை

திருச்சி விமான நிலையம் முற்றுகை
திருச்சி விமான நிலையம் முற்றுகை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருச்சி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் திருச்சியில் பேரணி நடைபெற்றது. அதில் திருச்சி விமான நிலையத்தை நோக்கி, விவசாயிகளும், தினகரன் ஆதரவாளர்களும் பேரணியாக சென்று விமான நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும் போரட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து அய்யாக்கண்ணு மற்றும் தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com