ஆளில்லாத சுகாதார மையத்தின் மீது இடிந்து விழுந்த ரேஷன் கடை !

ஆளில்லாத சுகாதார மையத்தின் மீது இடிந்து விழுந்த ரேஷன் கடை !

ஆளில்லாத சுகாதார மையத்தின் மீது இடிந்து விழுந்த ரேஷன் கடை !
Published on

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஒட்டுப்பட்டரை பகுதியில் இயங்கிவந்த ரேஷன்கடை திடீரென இடிந்து அருகே உள்ள சுகாதார மையத்தின் மேல் விழுந்தது.


குன்னூர் 27-வது வார்டு ஓட்டுப்பட்டரையில் இயங்கிவந்த ரேஷன் கடையில் சுமார் 850 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இங்கு அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இருப்பு உள்ள நிலையில் கடையின் பின்பக்க சுவர் முழுவதும் திடீரென இடிந்து விழுந்தது. இதில் உள்ளே இருந்த ரேஷன் பொருட்கள் அருகே இருந்த சுகாதார மையத்தின் மேல் விழுந்ததில் ரேஷன் பொருட்கள் சேதம் அடைந்தது.


ரேஷன் கடையின் சுவர் இடிந்து விழுந்ததில் அருகே உள்ள சுகாதார மையத்தின் சுவர் சேதமடைந்து உள்ளது. உடனே தகவல் அறிந்து வந்த நிக்கல்சன் கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி மற்றும் ஊழியர்கள் ரேஷன் பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com