முட்புதரில் கிடந்த பச்சிளம் ஆண்குழந்தை... உயிருடன் மீட்ட கிராம மக்கள்

முட்புதரில் கிடந்த பச்சிளம் ஆண்குழந்தை... உயிருடன் மீட்ட கிராம மக்கள்
முட்புதரில் கிடந்த பச்சிளம் ஆண்குழந்தை... உயிருடன் மீட்ட கிராம மக்கள்

பாசன வாய்க்கால் ஓரம் முட்புதரில் கிடந்த பிறந்த சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை... கிராம மக்கள் உயிருடன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தில் முகுந்தன் நல்லூர் சாலை அருகே பாசன வாய்க்கால் ஓரமாக கருவேலமரம் தோப்பு உள்ளது. அங்கு இன்று காலை அப்பகுதியில் சென்ற கிராம மக்களுக்கு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. முட்புதரில் சென்று பார்த்தபோது ஒரு பையில் பிறந்த சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 


குழந்தையை எறும்பு கடித்து காயம் ஆன நிலையில் பையிலிருந்த பச்சிளம் குழந்தையை மீட்ட கிராம மக்கள் குழந்தையை சுத்தம் செய்து காவல்துறைக்கும் சமூகநலத் துறைக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 


பிறந்த சில மணிநேரம் ஆன ஆண் குழந்தை முட்புதரில் பையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர், முதலுதவி சிகிச்சைக்குப் பின் கடலூர் சமூக நலத்துறை அலுவலரிடம் குழந்தை ஒப்படைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com