4 தொகுதிகளில் நடுவிரலில் மை

4 தொகுதிகளில் நடுவிரலில் மை
4 தொகுதிகளில் நடுவிரலில் மை

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான முழுமையான ஏற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக சில கிராம மக்கள் முடிவெடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களையும் வாக்களிக்கச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில், வாக்குபதிவின் போது வாக்காளர்களுக்கு நடுவிரலில் மை வைக்கப்பட வேண்டும் என்று சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com