செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் உயர்நீதிமன்றம் முன் ஜாமீன்

செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் உயர்நீதிமன்றம் முன் ஜாமீன்

செந்தில் பாலாஜிக்கும் ஜோதிமணிக்கும் உயர்நீதிமன்றம் முன் ஜாமீன்
Published on

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் கரூர் திமுக மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஜோதிமணி போட்டியிட்டார். ஜோதிமணிக்கு ஆதரவாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது இறுதிகட்ட பிரச்சாரத்திற்கு நேரம், இடம் ஒதுக்கீடு செய்வதில் தேர்தல் அதிகாரிகள் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினர். 

மேலும் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் வீட்டிற்கு செந்தில் பாலாஜி சென்றிருந்தார். அப்போது இரவு 12 மணிக்கு மேல் தன்னுடைய வீட்டிற்கு வந்து தன்னை மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி உட்பட 3 பேர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தாங்கள் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி, ஜோதிமணி மற்றும் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  வாரத்தில் 3 நாட்கள் தாந்தோன்றி மலை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com