ஆளுநருக்கே பேரவையை கூட்டும் அதிகாரம் உள்ளது: மு.க.ஸ்டாலின்

ஆளுநருக்கே பேரவையை கூட்டும் அதிகாரம் உள்ளது: மு.க.ஸ்டாலின்

ஆளுநருக்கே பேரவையை கூட்டும் அதிகாரம் உள்ளது: மு.க.ஸ்டாலின்
Published on

சட்டப்பேர‌வையைக் கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையை திமுகவால் கூட்ட முடியாது என்றும், ஹெச்.ராஜா பேசுவது திசைத் திருப்புவதற்கான முயற்சி என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் " சட்டமன்றத்தை எங்களால் கூட்டமுடியாது. சட்டமன்றத்தைக் கூட்டினால் மட்டுமே எங்களால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியும். அதனை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. மெஜாரிட்டி இல்லாத நிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, மெஜாரிட்டி இருப்பதாக நினைத்தால் உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட ஆளுநரிடம் பரிந்துரைக்க வேண்டும். அல்லது அதற்கு சப்பைக்கட்டு கட்டும் பாஜக-வாவது ஆளுநரிடம் இதுகுறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து எங்களிடம் கூறுவது திசைதிருப்பும் முயற்சி" என தெரிவித்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அஞ்சுவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சனம் செய்திருந்த நிலையில் ஸ்டாலின் அதற்குத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com