இந்த நிலையில் இந்த பேச்சு தொடர்பாக ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஆ.ராசாவின் கருத்துகள் அவதூறானவை மட்டுமல்லாது, பெண்களின் தாய்மையை களங்கப்படுத்தும் வகையிலும் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அவரது பேச்சு தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானவை எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இது தொடர்பாக இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்கும்படி கூறியுள்ள தேர்தல் ஆணையம் அவ்வாறு செய்யத் தவறினால் ஆ. ராசாவை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.