உண்டியல் மூலம் வசூல் செய்து வேட்புமனு தாக்கல்: கவனம் ஈர்த்த வந்தவாசி சிபிஎம் வேட்பாளர்

உண்டியல் மூலம் வசூல் செய்து வேட்புமனு தாக்கல்: கவனம் ஈர்த்த வந்தவாசி சிபிஎம் வேட்பாளர்
உண்டியல் மூலம் வசூல் செய்து வேட்புமனு தாக்கல்: கவனம் ஈர்த்த வந்தவாசி சிபிஎம் வேட்பாளர்

வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டெபாசிட் தொகை கட்டுவதற்கு உண்டியல் மூலம் பொதுமக்களிடம் வசூல் செய்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில், வேட்புமனுத் தாக்கலின் போது செலுத்தும் டெபாசிட் தொகையை வீதி வீதியாக மக்களிடம் சென்று உண்டியல் மூலம் வசூல் செய்தார்.

இதைத் தொடர்ந்து வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் ஆனந்த குமாரிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போது டெபாசிட் தொகையை கட்டும்போது பொதுமக்களுக்காக தேர்தலில் போட்டியிடுகிறேன் அதனால் பொதுமக்களிடையே உண்டியல் வசூல் செய்து டெபாசிட் தொகை கட்டுகிறேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com