\
தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த புதிய ஆளுநர்

தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த புதிய ஆளுநர்

தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த புதிய ஆளுநர்
Published on

தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள பன்வாரிலால் புரோஹித், அரசியல் பாகுபாடின்றி செயல்படுவேன் எனவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார். 

புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆளுநர் மாளிகையில் பேட்டியளித்தார். அப்போது அவர்,  அரசியல் சாசனத்தை பாதுகாப்பதே தனது முதல் கடமை என்று கூறினார். மேலும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவேன் என்றும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் உறுதி அளித்துள்ளார். பின்பு இறுதியாக தமிழக மக்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com