டிரெண்டிங்
''என்றும் நான் அம்மாவின் மாணவன்'': ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த முதல்வர்.!
''என்றும் நான் அம்மாவின் மாணவன்'': ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த முதல்வர்.!
இந்த ஆசிரியர் தினத்தில், என்றும் எனக்கு அரசியல் ஆசானாய் இருக்கும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஆசிரியர் தினமான இன்று, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் ஆசிரியரின் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்துசொல்லி வருகின்றனர். இந்த சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.