“எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் செய்யவில்லை” - மாஃபா பாண்டியராஜன்

“எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் செய்யவில்லை” - மாஃபா பாண்டியராஜன்
“எஸ்.வி.சேகர் கிரிமினல் குற்றம் செய்யவில்லை” - மாஃபா பாண்டியராஜன்

எஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் எஸ்.வி.சேகர் ஃபேஸ்புக் பக்கத்தில் இழிவான கருத்தை பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதேசமயம் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து பத்திரிகையாளர்கள் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது. எஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. இருப்பினும், எஸ்.வி.சேகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. 

இந்நிலையில், எஸ்.வி.சேகர் மிகப்பெரிய கிரிமினல் குற்றம் எதையும் செய்யவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். மேலும், எஸ்.வி.சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com