மனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேச்சு..!

மனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேச்சு..!
மனம் மாறிய சுதர்சன நாச்சியப்பன்... கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்து பேச்சு..!

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் சந்தித்து பேசியுள்ளார்.

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு அக்கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுதர்சன நாச்சியப்பன் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசியிருந்த சுதர்சன நாச்சியப்பன், “சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் இருக்கிறது ப.சிதம்பரத்தின் குடும்பம்; எனவே அவர்களை மக்கள் வெறுக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். இது காங்கிரஸ் கட்சி மட்டுமில்லாமல் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பேசிய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக தலைவரான கே.எஸ்.அழகிரி, கட்சித் தலைமை எடுத்த முடிவை விமர்சிப்பது சுதர்சன நாச்சியப்பனுக்கு அழகல்ல என்று தெரிவித்தார். வேட்பாளருக்கு சுதர்சன் நாச்சியப்பன் தகுதியானவர் தான் என்றும் ஆனால் கட்சித் தலைமை முடிவை ஏற்பதே சரியாக இருக்கும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

இந்நிலையில், தனது கருத்தால் எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் பணிமனைக்கு சென்ற சுதர்சன நாச்சியப்பன், அங்கு கார்த்தி சிதம்பரத்தை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை என்பதால் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com