தமிழக மாணவர்கள் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரும் மு.க.ஸ்டாலின்

தமிழக மாணவர்கள் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரும் மு.க.ஸ்டாலின்
தமிழக மாணவர்கள் மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரும் மு.க.ஸ்டாலின்

வெளி மாநிலங்களில் தொடரும் தமிழக மாணவர்களின் மரணங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் மாணவர் சரவணன் உயிரிழந்ததும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் மாரிராஜ் சித்திரவதைக்குள்ளாகி தற்கொலை செய்ய முயன்றதையும் குறிப்பிட்டுள்ளார். 

சரவணன் மரணம், மாரிராஜ் மீதான தாக்குதல் போன்றவற்றில் மாநில அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்து, உரிய முறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், தற்போது டெல்லியில் இன்னொரு தமிழக மாணவர் சரத் பிரபுவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார். டெல்லியில் தமிழக மாணவர்களின் தொடர் மரணங்களை தடுக்கும் வகையில், சரவணன் மரணம், சரத் பிரபுவின் மரணம் ஆகியவை குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com