ஸ்டாலின் நிதானமிழந்து பேசுகிறார்: ஓ.எஸ்.மணியன்

ஸ்டாலின் நிதானமிழந்து பேசுகிறார்: ஓ.எஸ்.மணியன்

ஸ்டாலின் நிதானமிழந்து பேசுகிறார்: ஓ.எஸ்.மணியன்
Published on

ஸ்டாலின் நிதானமிழந்து பேசுகிறார் என ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்தார்.

சென்னை திருவான்மியூரில் கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்துவைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன், " எதிர்க்கட்சித் தலைவராக செயல்படும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நிதானம் இழந்துள்ளார். முதலமைச்சர் நாற்காலியை பிடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில், கோபத்தின் வெளிப்பாடாக எந்த வார்த்தையை பேசுவது? எந்த வார்த்தையை சொல்லக் கூடாது என்பதற்கேற்ற தலைமைக் பண்பு இல்லாமல் பேசுகிறார். குறிப்பாக, பெரும்பான்மையை இழந்துவிட்ட இந்த அரசு மானம் இருந்தால், சூடு இருந்தால், சொரணை இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கூறுகிறார். ஆனால் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து மைனாரிட்டி ஆட்சி நடத்தியது ஸ்டாலினின் தந்தை கருணாநிதி. அவரிடம் ஸ்டாலின் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும். அதுதான் நியாயம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com