ஸ்டாலின்தான் வராரு: ஸ்டிக்கரை கிழித்த பேரூராட்சி ஊழியர்கள்... திமுகவினர் சாலை மறியல்!

ஸ்டாலின்தான் வராரு: ஸ்டிக்கரை கிழித்த பேரூராட்சி ஊழியர்கள்... திமுகவினர் சாலை மறியல்!

ஸ்டாலின்தான் வராரு: ஸ்டிக்கரை கிழித்த பேரூராட்சி ஊழியர்கள்... திமுகவினர் சாலை மறியல்!

ஸ்டாலின் தான் வராரு என்ற ஸ்டிக்கரை தேசூர் பேரூராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் கிழித்ததால் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வந்தவாசி அடுத்துள்ள தேசூர் பேரூராட்சி முழுவதும் ஸ்டாலின்தான் வராரு ஸ்டிக்கர் பஜார் சாலை மற்றும் தனியார் இடங்கள் முழுவதும் நேற்று திமுகவினர் ஒட்டினர். இதை தேசூர் பேரூராட்சி ஊழியர்கள் கிழித்து சாலையில் போட்டுச் சென்றனர் .

இதை பார்த்த திமுகவினர் ஆத்திரமடைந்து ஸ்டாலின்தான் வராரு என்ற ஸ்டிக்கரை மட்டும் பேரூராட்சி ஊழியர்கள் கிழித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் சமாதானம் செய்தனர்.

இதையடுத்து திமுகவினர் அளித்த பேட்டியில் பேரூராட்சி ஊழியர்கள் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். தேர்தல் நேரம் என்பதால் திமுகவினர் அமைதியாக இருந்து வருகின்றனர் என்றும் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com