ஆர்.கே.நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

ஆர்.கே.நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்

ஆர்.கே.நகரில் வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
Published on

இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகரில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ள சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வாக்கு மையங்களில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம், மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், பிழைகளை நீக்கவும் பலர் விண்ணப்பித்து வருகின்றனர்.

நாளை மறுநாள் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடுவீடாக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com