ரேபரேலியில் சோனியா இன்று மனுத்தாக்கல்

ரேபரேலியில் சோனியா இன்று மனுத்தாக்கல்
ரேபரேலியில் சோனியா இன்று மனுத்தாக்கல்

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

எழு கட்டங்களாக நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், உத்தரப்பிரதேசத்தில் அனைத்துக் கட்டங்களிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் மே 6 ஆம் தேதி நடைபெறும் ஐந்தாம் கட்டத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, இந்த ரேபரேலி தொகுதியில் 1999-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ரேபரேலியில் 1977, 1996, 1998 ஆகிய 3 தேர்தலைகளைத் தவிர, மற்ற 13 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி கண்டுள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் கோட்டையான ரேபரேலியில் 5-வது முறையாக களமிறங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். காங்கிரஸ் தொண்டர்களுடன் 700 மீட்டர் தூரம் ஊர்வலமாகச் செல்லும் சோனியாவுடன், அவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்காகாந்தி‌ ஆகியோரும் ஊர்வலமாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com