மீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி?

மீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி?
மீண்டும் களமிறங்குகிறாரா சோனியா காந்தி?

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும், இரு அணியிலும் இல்லாத பிற கட்சிகளுக்கும் சோனியா காந்தி ‌அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பங்கேற்க திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பாஜக அணியில் இல்லாத பிஜூ ஜனதா தளம், ஒய்‌ எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சோனியா காந்தி தூதர்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கூட்டாட்சி முன்னணி என்ற பெயரில் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க சந்திரசேகர் ராவ் முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் நிலையில், சோனியா காந்தி ஆட்சியமைப்பு நடவடிக்கைகளில் நேரடியாக களமிறங்க உள்ளதாக தெரிகிறது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின் தீவிர அரசியலில் ஈடுபடாமல், சோனியா காந்தி ஒதுங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com