திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா
Published on

திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் சந்திக்கவுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் முடிவடைந்த நிலையில், டெல்லியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்தை வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்கவுள்ளனர். காலை 9 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com