விலங்குகளுடன் எதிர்க்கட்சிகளை ஒப்பிட்டு பேசிய அமித் ஷா

விலங்குகளுடன் எதிர்க்கட்சிகளை ஒப்பிட்டு பேசிய அமித் ஷா

விலங்குகளுடன் எதிர்க்கட்சிகளை ஒப்பிட்டு பேசிய அமித் ஷா
Published on

பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா எதிர்க்கட்சியினரை குரங்குகள், நாய்கள், பூனைகள், பாம்புகளுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, 

மும்பையில் பேரணி ஒன்றில் பேசிய அவர் அடுத்தாண்டு மக்களவை தேர்தலை சந்திப்பதற்காக நாய்கள், குரங்குகள், பாம்புகள் ஒன்று சேர திட்டமிட்டுள்ளதாகவும் ஆனால் மோடி என்ற பெருவெள்ளத்தில் அந்த விலங்குகள் அடித்துச் செல்லப்படும் என்றும் பேசினார். ஆனால் இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, எதிர்க்கட்சிகளை விலங்குகளுடன் ஒப்பிடுவது தமது நோக்கமல்ல.என்றும் கொள்கை மாறுபாடு உள்ளவர்கள் மோடியை வீழ்த்த ஒன்று சேர்வதைத்தான் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் அமித் ஷா விளக்கினார். இதற்கிடையில் அமித் ஷாவின் பேச்சு வெட்கக்கேடானது என்றும் இது அவரது மனப்பாங்கை காட்டுவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com